அதிவேக ரயில்கள் பட்டியல்: கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு 3வது இடம்!

நாட்டிலேயே அதிக வேகமாக இயக்கப்படும் ரயில்களின் பட்டியலில் சென்னை - கோவை இடையே செல்லும் வந்தே  பாரத் ரயில் 90.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 3-வது இடத்தில் உள்ளது. டெல்லி- வாரணாசி வந்தே பாரத் ரயில் 96.37 கிலோ மீட்டர் வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது.


கோவை: நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரயில்களில் கோவை - சென்னை வந்தே பாரத் ரெயில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை (20644) கடந்த ஏப்ரல் மாதம் 8-ந்தேதி சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படுகிறது.

கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு பகல் 11.50 மணிக்கும், சென்னையில் இருந்து பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.15 மணிக்கும் வந்து சேருகிறது.

ரயில் இயக்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது. சென்னை - கோவை இடையே மொத்தம் உள்ள 500 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடைவதால் பலரும் இந்த ரயிலை விரும்பி பயணித்து வருகிறார்கள்.

இதில் சாதாரண கட்டண மாக ரூ.1,365 (உணவு உள்பட), எக்ஸ்கியூட்டிவ் கட்டணம் ரூ.2,485-ம் (சாப்பாடு உள்பட) வசூலிக்கப்படுகிறது.

நாட்டிலேயே 3-வது அதிவேக ரயில்

கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் கோவை முதல் ஜோலார்பேட்டை வரை மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகிறது.

கோவை- சென்னை இடையே சராசரியாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இது நாட்டிலேயே 3-வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கான பட்டியலை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, டெல்லி- வாரணாசி வந்தே பாரத் ரயில் 96.37 கிலோ மீட்டர் வேகத்தில் முதல் இடத்தில் உள்ளது.

ஹஜரத் நிஜாமுதீன் - ராணி கம்லாபதி வந்தே பாரத் ரயில் 95.89 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று 2-வது இடத்திலும், சென்னை - கோவை வந்தேபாரத் ரெயில் 90.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 3-வது இடத்திலும் உள்ளது.

சென்னை - மைசூரு வந்தே பாரத் ரெயில் 79.36 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 10வது இடத்திலும் உள்ளது என தெரிவித்துள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...