தாராபுரம் அருகே வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய பந்தல் தொழிலாளி - பரபரப்பு!

தாராபுரம் அருகே ரோட்டாலவலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வனப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. விசாரணையில் இறந்தவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த பந்தல் தொழிலாளி தாமோதரன் என்பது தெரியவந்த நிலையில் கொலையா தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே வனப்பகுதியில் பந்தல் தொழிலாளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தாமோதரன் (52). பந்தல் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் பந்தல் வேலைக்கு செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்

இந்த நிலையில் தாமோதரன் இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக மகன் மற்றும் மகள்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் தாமோதரன் கிடைக்கவில்லை.



இந்த நிலையில் இன்று காலை ரெட்டாலவலசு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை அருகே வனப்பகுதியில் உள்ள மரத்தில் ஆண் சடலம் ஒன்று தொங்குவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தாமோதரன் உடலை பரிசோதனை செய்து இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா அல்லது மன உளைச்சலின் காரணமாக அவரே தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...