ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து திமுக சாதகப்படுத்தி கொள்கின்றனர் - பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து!

கோவை நவஇந்தியா பகுதியில் நடைபெற்ற ரைஸ் ஆப் நியூ இந்தியா நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமராவார் என கூறியுள்ளார்.


கோவை: ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து திமுக சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் 123வது பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக, கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'Rise of New India - ரைஸ் ஆஃப் நியூ இந்தியா' எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.

டாக்டர்.ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குனர் அனிர்பன் கங்குலி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது,

ஆர்ட்டிகள் 370 நீக்கப்பட வேண்டும் என தெரிவித்த மனிதரான ஷாம் பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.

ரவீந்திரநாத் ஜட்ஜ்மெண்ட் படிக்கவில்லை. அதைப் பார்த்த பின்பு அதன் தகவலை தெரிவிக்கிறேன். அறப்போர் இயக்கம் டிரான்ஸ்பார்ம் வாங்கியதாக 397 கோடி ஊழலை தெரிவித்துள்ளனர்.

டெண்டர் எப்படி நடந்தது என தெரிவித்துள்ளனர். டெண்டர் பிக்சிங் நடந்துள்ளது. அறப்போர் செய்திக்கு நாங்கள் ஆதரவு. அறப்போர் புகாருக்கு விசாரணை செய்ய வேண்டும். முதல்வர் இதிலும் செந்தில் பாலாஜி போல காப்பாற்றப் போவாரா.?

ஆளுநர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். திமுக இத்தனை காலம் நம்மை ஏமாற்றி உள்ளது. ஆளுநர் அதிகமாக பேசக்கூடாது என்பதை வைத்து சாதகப் படுத்திக் கொள்கின்றனர். சிபிஐ ஒரிஜினல் பேப்பர் ஆகியவற்றை கொடுக்காத போது எப்படி ஆளுநர் செயல்படுவார்.

ஆர்.எஸ். பாரதி பேசும் பேச்சுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. என்னுடைய தொண்டர்கள் அண்ணாமலையை பிரியாணி போட்டு விடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார்.

அரிவாள் யார் புடிச்சாலும் வெட்ட தான் செய்யும். நாம் விவசாயி வேற. ஒரு கன்னத்தை அடித்தால் ஒரு கன்னத்தை காட்ட அரசியலுக்கு வரவில்லை.

என்ன தலைகீழ நின்னு தோப்பு காரணம் போட்டாலும் 2024 இல் 400 எம்பி பெற்று மீண்டும் பிரதமராக மோடி வருவது உறுதி. தமிழகத்தில் 39 வருவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...