தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு - பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல மண்வெட்டியை எடுக்க வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார்.



அப்போது அங்கே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கோவை சரக வனத்துறையினர் கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது கெம்பனூர் பகுதி வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கிருந்து, இந்த மலைப்பாம்பு வந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...