பல்லடம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து - 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேதம்!

பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் வாடகைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் என வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளது.



அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்தில், பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newsletter

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...