பல்லடம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து - 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேதம்!

பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் வாடகைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் என வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளது.



அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்தில், பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...