கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி திருப்பூரில் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட நகரப் பேருந்துகளை முறையாக இயக்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போக்குவரத்து பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் காங்கேயம் சாலை சி டி சி பணிமனை டிப்போ முன்பாக கொரோனா காலத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை முறையாக இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தின் போது திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் ஏராளமான நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன, கொரோனா காலத்திற்கு பின்பு இயல்பு நிலை திரும்பி உள்ள இச்சூழ்நிலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன.



இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதியில் பள்ளிகளுக்கும் சென்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும், உரிய நிறுத்தங்களில் நின்று செல்ல உத்தரவிட வேண்டும். சனி ஞாயிறு மற்றும் திருவிழா காலங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், கட்டணமில்லா பயணம் செய்யும் பெண்கள், மாற்று திறனாளிகள், மாணவ மாணவிகளை கண்ணியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இனியும் பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...