ஆர்.எஸ்.எஸ் தனது கால் செருப்பிற்கு சமம் என்ற கேரள முதலமைச்சரின் கருத்திற்கு பரிதாபப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் செய்தித்தொடர்பாளர் பேட்டி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது தனது கால் செருப்பிற்கு சமம் என்ற கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய கருத்திற்கு தான் பரிதாபப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோவையில் பேட்டியளித்துள்ளார்.

கோவை எட்டிமடை அமிர்த விஸ்வ வித்யாலயத்தில் வருகிற மார்ச் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ராஸ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.

இதில் அவ்வமைப்பின் தேசிய செய்தி தொடர்பாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையில், நாடு முழுவதிலுமிருந்து 1500 மாநில நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாகவும், இதில் நாட்டில் நிலவி வரும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேவையாற்றி வரும் பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். 

பா ஜ க, ஏ.பி.வி.பி, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட கிளை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது கால் செருப்பிற்கு சமம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறிய கருத்திற்கு தாம் பரிதாபப்படுவதாகவும், உலகம் முழுவதும் மறைந்துவிட்ட மார்க்சிஸ்ட் கருத்துக்களை தாங்கிபிடிக்க முயல்பவர்களின் கருத்துக்காக தாம் பரிதாபப்படுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

வன்முறையால் கட்டமைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் அமைப்பு மற்றவர்களின் ரத்தத்தால் ஆட்சியினை தொடர முயல்வதாக குற்றம்சாட்டிய அவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஆனால் அதனை கடந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கேரளாவில் வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...