சோமையம்பாளையம் துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைக்க கோரி அகில பாரத மக்கள் கட்சி மனு!

சோமையம்பாளையம் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் இருப்பதால், அதனை சீரமைக்க கோரி அகில பாரத கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சோமையம்பாளையம் அருகேயுள்ள துணை சுகாதார நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டிடம் போதிய பாதுகாப்பின்றி பழுதடைந்து இடிந்து நிலையில் உள்ளது.

மேலும், அங்குள்ள கழிவு நீர் தொட்டி மற்றும் கழிவறையில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சிகிச்சைக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் எடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்து தர வலியுறுத்தி அகில பாரத மக்கள் கட்சியினர், அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...