தேசிய மருத்துவர்கள் தினம் - கோவை அரசு மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1 தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் பி சி ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.



மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இருப்பது போன்று போடப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



இதையடுத்து பயிற்சி மருவத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...