தேசிய மருத்துவர்கள் தினம் - கோவை அரசு மருத்துவமனையில் உற்சாக கொண்டாட்டம்!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மேலும் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


கோவை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஜூலை 1 தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மருத்துவத்துறையில் பி சி ராயின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை தேசிய மருத்துவர்கள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி கோவை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.



மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் இருப்பது போன்று போடப்பட்டிருந்த கோலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



இதையடுத்து பயிற்சி மருவத்துவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தலைமையில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் மருத்துவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...