உதவி ஜெயிலர் பணிக்கான தேர்வு - கோவையில் விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வு எழுதினர்!

தமிழக முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற உதவி ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வில் கோவை மாவட்டம் முழுவதும் விண்ணப்பித்தவர்களில் 45 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் நடைபெற்ற ஜெயிலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 45 சதவீதம் மட்டுமே தேர்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உதவி ஜெயிலர் பணியிடத்திற்கான தேர்வு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் அதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும்நடைபெற்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தை பொருத்தவரை இந்த தேர்வுக்காக 16 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அனைத்து மையங்களிலும் காலை ஒன்பது முப்பது மணி முதல் இந்தத் தேர்வானது இணையதளம் மூலம் துவங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 40 முதல் 45 சதவீதம் வரையிலான தேர்வர்கள் மட்டுமே பங்கேற்று தேர்வினை எழுதி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் டி.சி.எஸ் நிறுவனம் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...