தமிழகத்தில் முதல்முறையாக அரசு பணியாளர்களின் குழந்தைகளை கவனிக்க குழந்தைகள் காப்பகம்!

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக பகல் நேர குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார். இந்த காப்பகத்தில் 4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை: தமிழகத்தில் முதல் முறையாக அரசு ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்கான சிறப்பு குழந்தை காப்பகம் கோவை ஆட்சியர் திறக்கப்பட்டுள்ளது.



பொதுவாக பணிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டின் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்று வருகின்றனர். இதே போல கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களின் குழந்தைகளை கவனிப்பதற்காக குழந்தைகள் பகல்நேர சிறப்பு காப்பகம் திறக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த குழந்தைகள் காப்பகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவங்கி வைத்தார்.



4 அங்கன்வாடி ஊழியர்கள், ஒரு தனியார் ஆசிரியர் என 5 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள நியமிக்கப்பட்டு உள்ளனர்.



இந்த காப்பகத்தில் 7 வயதிற்குள் உள்ள குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



விளையாட்டு, உடற்பயிற்சி, மற்றும் குழந்தைகளுக்கான பாடல்களை ஒளிப்பரப்ப தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விளையாடும் குழந்தைகள் கிழே விழுந்தாலும் அடிபடாமல் இருக்க மேட் போடப்பட்டு உள்ளது.



அதே போல பெற்றோர்கள் கொடுத்துச் செல்லும் உணவுகள் மட்டுமின்றி சத்து மாவுகளும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தினமும் அரசு ஊழியர்களின் பணி நேரங்களில் இந்த காப்பகத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் குழந்தைகளும் மாலை நேரத்தில் காப்பகங்களில் கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ தனியார் பள்ளி பங்களிப்புடன் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ள குழந்தைகள் பகல் நேர காப்பகத்திற்கு ஊழியர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பு கிடைத்துள்ளது.



முதல் நாளிலேயே சுமார் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பகல் நேர காப்பகத்தில் விடப்பட்டனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...