கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வரும் சிறுபான்மையின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.
இவர்கள், தங்களது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தினை நடத்தவே மிகுந்த சிரமத்தில் உள்ளதால் இவர்கள் வசிக்க வீடு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை மெற்கொண்டு இவர்களுக்கு வீட்டுமணை பட்டா வழங்கிட ஆவண செய்யுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணி தலைவி நிர்மலா மாதாஜி, ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 60-க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு இல்லாமல் மிகுந்த சிரமத்தில் தங்களது வாழ்வாதாரத்தினை நடத்தி வருகின்றனர்.
இவர்கள், தங்களது வருமானத்தைக் கொண்டு குடும்பத்தினை நடத்தவே மிகுந்த சிரமத்தில் உள்ளதால் இவர்கள் வசிக்க வீடு ஒன்றினை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.
இதுகுறித்து நடவடிக்கை மெற்கொண்டு இவர்களுக்கு வீட்டுமணை பட்டா வழங்கிட ஆவண செய்யுமாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.