பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை - மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி கருத்து!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பாஜக அனைத்து அணிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.



கோவை: பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சிக்கும் இல்லை என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார். 



மத்திய பாஜக அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில், கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அக்கட்சியின் பல்வேறு அணிகளின் கூட்டம் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிசான் ரெட்டி, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 



இந்நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் கனகசபாபதி, ஜி.கே.செல்வகுமார், விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநகர மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிசான் ரெட்டி, பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறும் விதமாக கடந்த ஒரு மாதமாக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்களை நேரடியாக சந்தித்து பேசி வருகிறோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான வரவேற்பும் ஆதரவும் அதிகமாகியுள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் அனைத்து தொகுதிகளிலும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியினர் துவங்கியுள்ளனர். 

ஆளும் திமுக குடும்ப ஊழல் ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைய மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதை ஒவ்வொரு மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறோம். 

தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் பிகாரில் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் வலிமை எந்த எதிர்க்கட்சியினருக்கும் இல்லை, அதனால் தான் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்தியாவின் அனைத்து ஊழல் கட்சிகளும் குடும்பக் கட்சிகளும் சேர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் ஒற்றுமையாக நிற்க முடியாது.

தற்காலிக பலனுக்காக மட்டுமே அவர்கள் இந்த ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர். இவர்களால் ஒற்றை தலைமையிலான பிரதமர் வேட்பாளரின் கீழ் பணி செய்ய முடியாது. இவர்களில் யார் பிரதமர் வேட்பாளர், கூட்டணிக்கு யார் தலைவர் என தீர்மானிக்க முடியவில்லை. 

இந்தியா பல்வேறு விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது பல்வேறு பிரச்சனைகளும் உள்ளது. இதை சரி செய்ய சிறப்பான தலைமையை கொண்டுள்ள பாரத பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினரால் முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...