கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் கைது!

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி கோவையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



கோவை: கோவையில் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவையை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். 

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். இப்பேரவையின் அமைப்பு செயலாளர் நாகராஜன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. 



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தின் துவக்கமாக அமலாக்க துறையை கண்டித்தும் பாஜக அரசை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

மேலும் இப்போராட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 



பின்னர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 



இந்த போராட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜன், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணை சட்டவிரோதமானது. அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும். சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுதலை செய்ய வேண்டும். 

மாதம்தோறும் நண்பர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கி செலவு செய்வதாக ஒப்புக்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அமலாக்கத்துறை வருமானவரித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது. 

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த பிறகு, அண்ணாமலை தூண்டுதலின் பெயரால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியை சீர் குலைக்கின்ற வகையில், ஒன்றிய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை பழிவாங்குகிற நோக்கில், திமுக அரசிற்கு எதிராக இந்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. 

மோடி சர்க்கார் ஜனநாயக விரோத போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும். அது தவறும் பட்சத்தில் ஒற்றை கருத்துகள் உடைய அமைப்புகளை திரட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் மேற்கொள்ளப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...