வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி ரூ.200 கோடி மோசடி - தலைமறைவாக இருந்த நபர் கைது!

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், தொழிலில் பங்கு தாரராக இணைத்து கொள்வதாகவும் கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களிடம் 200 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கடன் பெற்று தருவதாக கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் 200 கோடிக்கும் மேல் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 



பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையம் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார் மற்றும் விஜயகுமாரின் மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவீனா ஆகிய நால்வரும் சேர்ந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோரிடம் தொழில் செய்வதற்கு வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளனர். 

மேலும் தொழிலில் பங்குதாரராக சேர்ந்து கொள்கிறோம் எனக் கூறி ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் நிலம் மற்றும் வீட்டு பத்திரத்தை வாங்கி கொண்டு வங்கி கடன் பெற்று தராமல் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்களால் பாதிக்கப்பட்ட கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15 மேற்பட்டோர் சிவக்குமார் உள்ளிட்ட நான்கு பேரிடம் இருந்து தங்களுக்கு சேர வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை பெற்று தரும்படி பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இவர்களது புகார் தொடர்பாக பல்லடம் போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்ச்சியாக புகார் மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பல்லடம் காவல்துறையினர் பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் உட்பட நான்கு பேர் மீது, வழக்குப்பதிவு செய்து நால்வரையும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, கடந்த மூன்று‌ மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோர் கைதான நிலையில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்ற பிடியாணை உத்தரவுப்படி தனிப்படை போலீசார் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சிவக்குமார் மற்றும் பிரவீனா ஆகியோரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரவீனாவை திருச்சியில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.



நேற்றிரவு மோசடி மன்னன் சிவகுமார் தேனியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சிவகுமாரை தேனியில் வைத்து கைது செய்தனர். 



கைது செய்யப்பட்ட சிவகுமாரை பல்லடம் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவகுமாரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...