கோவையில் ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடி - சைபர் போலீசார் விசாரணை!

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து, ஆன்லைனில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி முதலீடு செய்த கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: ஆன்லைனில் முதலீடு செய்ய ஆசை வார்த்தை கூறி கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்தவர் ஊர்மிளா (42). இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உஸ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த நபர் தான் சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தால் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். 

பிறகு என்னை அவர்களது டெலிகிராம் குழுவில் இணைத்து விட்டார். பின்னர் ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் தனது விவரங்களை பதிவு செய்தால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். அதனை உண்மை என நம்பிய நானும் அவர் சொன்னது போல் பதிவு செய்தேன். அப்போது முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்ததற்காக ரூ.210 கமிஷனாக அனுப்பினார். 

இதையடுத்து நான் ரூ.1000 முதலீடு செய்தேன். அதில் கமிஷன் என கூறி ரூ.1410 எனது வங்கி கணக்குக்கு வந்தது. இதனால் பண ஆசையில் மேலும் ரூ.5000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ.6420 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18,30,000 வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர் எனக்கு கமிஷன் தரவில்லை. 

எனவே சந்தேகமடைந்த நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எனது பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாததால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

ஆதவ் அர்ஜுனாவை நீக்க வேண்டும்: கோவையில் கிருஷ்ணசாமி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் குடும்பத்தினர் மீதா...

தங்க விலை உயர்வு: வரிச்சட்ட மாற்றம் கோரி கோவை நகை உற்பத்தியாளர்கள்

தங்க விலை உயர்வால் மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கம், வரிச்சட்ட மாற்றங்கள்...

பேரூர் டி.எஸ்.பி நடப்பயண ரோந்து; பொதுமக்களிடம் குறைகள் கேட்பு

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் பேரூர் டி.எஸ்.பி கால்நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்...

கூடலூரில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ சுனில் ஆனந்த்

கூடலூர் நகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட மேட்டுப்பாளையம் எம்எல்ஏ சுனில் ஆனந்த், பழுதடைந்த குடிநீர் தொட...

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...