உடுமலையில் ரஜேந்திரா ரோட்டில் வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்க சி.ஐ.டி.யு கோரிக்கை!

உடுமலை வார சந்தைக்கு எதிரே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்கள் நிறுத்தக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் கூறியதால், வாழ்வாதாரம் இழந்துள்ள வாடகை வாகன ஓட்டுனர்கள், மீண்டும் அதே இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது.



திருப்பூர்: உடுமலை அருகே ராஜேந்திரா ரோட்டில் வாடகை வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு கோரிக்கை விடுத்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் வாரச்சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள ராஜேந்திரா ரோட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மினிடோர், டூரிஸ்ட் கார், வேன், டெம்போ உள்பட 100க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வாடகைக்கு ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த இடத்தில் போக்குவரத்து நெருக்கடி உள்ளது. எனவே வாகனங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் நிறுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சி.ஐ.டி.யு சங்கத்தின் தலைமையில் ஒன்று சேர்ந்து உடுமலை நகர மன்ற தலைவர் மு.மத்தீனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்தையில் ஏற்கனவே உள்ள அதே இடத்தில் தொடர்ந்து வாகனங்களை நிறுத்திக் கொள்வது என்றும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை சீராக முறைப்படுத்தி நிறுத்திக்கொள்வது என்றும் பேசி முறைப்படுத்தப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில் CITU நிர்வாகிகள் தண்டபாணி, மதுசூதனன், பஞ்சலிங்கம், சுதா சுப்பிரமணியம்,இயேசு ராஜ், தோழர் ராஜா உள்பட வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...