'உங்களை தேடி யோகா' ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ - ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடாக 'உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

சர்வதேச யோகா தினம்‌ வரும்‌ 21-ம்‌ தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்‌, இந்தியா முழுவதும்‌ உங்களை தேடி யோகா என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம்‌ முன்னெடுத்துள்ளது.

இதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன்‌ வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும்‌. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள்‌, அலுவலகங்கள்‌, குடியிருப்புகள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ குறைந்தப்பட்சம்‌ 15 பேர்‌ ஒன்றிணைந்தால்‌ ஈஷாவின்‌ யோகா பயிற்றுநர்கள்‌ நேரில்‌ வந்து யோகா கற்றுக் கொடுப்பார்கள்‌. 

இவ்வகுப்பில்‌, யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி, ஈஹா க்ரியா போன்ற மிகவும்‌ எளிமையான அதேசமயம்‌ சக்திவாய்ந்த யோக பயிற்சிகள்‌ கற்றுக் கொடுக்கப்படும்‌. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன்‌ மூலம்‌ முதுகுதண்டும்‌ நரம்பு மண்டலமும்‌ வலுப்பெறும்‌, மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌.

உங்கள்‌ இருப்பிடத்தில்‌ யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...