'உங்களை தேடி யோகா' ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ - ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடாக 'உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

சர்வதேச யோகா தினம்‌ வரும்‌ 21-ம்‌ தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்‌, இந்தியா முழுவதும்‌ உங்களை தேடி யோகா என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம்‌ முன்னெடுத்துள்ளது.

இதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன்‌ வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும்‌. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள்‌, அலுவலகங்கள்‌, குடியிருப்புகள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ குறைந்தப்பட்சம்‌ 15 பேர்‌ ஒன்றிணைந்தால்‌ ஈஷாவின்‌ யோகா பயிற்றுநர்கள்‌ நேரில்‌ வந்து யோகா கற்றுக் கொடுப்பார்கள்‌. 

இவ்வகுப்பில்‌, யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி, ஈஹா க்ரியா போன்ற மிகவும்‌ எளிமையான அதேசமயம்‌ சக்திவாய்ந்த யோக பயிற்சிகள்‌ கற்றுக் கொடுக்கப்படும்‌. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன்‌ மூலம்‌ முதுகுதண்டும்‌ நரம்பு மண்டலமும்‌ வலுப்பெறும்‌, மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌.

உங்கள்‌ இருப்பிடத்தில்‌ யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...