'உங்களை தேடி யோகா' ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ - ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு ஏற்பாடாக 'உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி உங்களை தேடி யோகா' என்ற தலைப்பில் ஈஷாவின்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெறவுள்ளது.

சர்வதேச யோகா தினம்‌ வரும்‌ 21-ம்‌ தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில்‌, இந்தியா முழுவதும்‌ உங்களை தேடி யோகா என்ற திட்டத்தை ஈஷா யோகா மையம்‌ முன்னெடுத்துள்ளது.

இதன்‌ மூலம்‌, பொதுமக்கள்‌ தங்கள்‌ இருப்பிடத்திலேயே நேரிலோ அல்லது ஆன்லைன்‌ வாயிலாகவோ இலவசமாக யோகா கற்றுக்கொள்ள முடியும்‌. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள்‌, அலுவலகங்கள்‌, குடியிருப்புகள்‌ உள்ளிட்ட இடங்களில்‌ குறைந்தப்பட்சம்‌ 15 பேர்‌ ஒன்றிணைந்தால்‌ ஈஷாவின்‌ யோகா பயிற்றுநர்கள்‌ நேரில்‌ வந்து யோகா கற்றுக் கொடுப்பார்கள்‌. 

இவ்வகுப்பில்‌, யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி, ஈஹா க்ரியா போன்ற மிகவும்‌ எளிமையான அதேசமயம்‌ சக்திவாய்ந்த யோக பயிற்சிகள்‌ கற்றுக் கொடுக்கப்படும்‌. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன்‌ மூலம்‌ முதுகுதண்டும்‌ நரம்பு மண்டலமும்‌ வலுப்பெறும்‌, மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்படும்‌.

உங்கள்‌ இருப்பிடத்தில்‌ யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...