அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனரை சஸ்பெண்ட் செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தனியார் ஆலைகளுக்கு ஆதரவாகவும், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனர் சண்முகநாதனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குனரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 62 ஆண்டுகால பழமையான சர்க்கரை ஆலையாகும். இந்த நிலையில் தற்போது ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சர்க்கரை ஆலை மிக விரைவில் மூடப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. 



இந்நிலையில், ஊழியர்களை ஒருமையில் நடத்தி வரும் மேலாண் இயக்குனரை பணிநீக்கம் செய்யக்கோரி அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலகம் முன்பு கரும்புகளுடன் விவசாயிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைத்து, விவசாயிகள் விளைவித்த கரும்பை முழுமையாக அரவை செய்ய வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும், பதினைந்து நாட்களுக்குள் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். 



கூடுதலாக கரும்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். பயிர் கடன் வழங்க வேண்டும். அமராவதி பிரதான கால்வாயில் கரும்பு பயிருக்கான உயிர் தண்ணீர் 21 நாட்களுக்கு விட வேண்டும், ஆலையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது மேலாண்மை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...