தேர்தல் வரும் போது மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நாங்கள் தெரிகிறோம் - திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கம் குற்றச்சாட்டு!

கோவில்களில் ஆபாச நடனம் ஆட கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்த திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர், தேர்தல் வரும்போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை: தேர்தல் வரும்போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம் என திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

தமிழ்நாடு திரைப்பட மேடை நடன கலைஞர் சங்கத்தின் கோவையில் உள்ள தனியார் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது சங்கத்தின் மாநில தலைவர் அஜித்ராஜா பேசியதாவது, 







கோவில்களில் ஆபாச நடனம் ஆட கூடாது என எங்கள் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோவில்களில் ஆபாச நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. 

இது ஒரு மகிழ்ச்சிகரமான தீர்ப்பு. அதற்கு அந்த நீதியரசர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். வருடத்தில் ஆறு மாதம் மட்டுமே தங்கள் தொழில் இருக்கும். அதில் வரும் வருமானத்தை கொண்டு தான் அடுத்த ஆறுமாதம் வாழ்வாதாரம் இருக்கும். தேர்தல் வரும்போது மட்டும் தான் அரசியல் கட்சியினர் கண்ணில் தெரிகிறோம். 

தேர்தல் வரும் போது எம்ஜிஆர், கலைஞர், உள்ளிட்டோர் போல் வேடமணிய நாங்கள் தென்படுகிறோம். அதை தவிர்த்து அரசு சார்பில் எங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை எவ்வித நலவாரியமும் அமைக்கப்படவில்லை.

கரகாட்டத்தில் ஆபாசம் தலைவிரித்து ஆடுகிறது, அதற்கு அங்கீகாரம் உள்ளது. ஆனால் தங்களுக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. தற்போது வரை நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அழிவு நிலையில் இருந்த எங்களின் நிலைமை தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் இனி உயரும் என நம்புகிறோம். 

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட கலைக்குழுக்களுக்கு மட்டும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். மேலும் குறிபிட்ட குழுக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். ஆபாச நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு பணம் கொடுக்க பலரும் தயாராக உள்ளார்கள்.

ஆனால், நாங்கள் எல்லாம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், எங்களுக்கு நல்ல தொகை கொடுக்கவோ, உதவி புரியவோ யாரும் முன்வருவதில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...