ரூ.50 துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றியிருப்பதே திமுக ஆட்சியின் நேர்மை நிர்வாகத்திற்கு உதாரணம்!

திருப்பூரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என கூறினார்.



திருப்பூர்: ரூ.50 மதிப்புள்ள துடைப்பத்தை ரூ.440 என தீர்மானம் நிறைவேற்றி வாங்கி இருப்பதே திமுக ஆட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். 



விலைவாசி உயர்வு மற்றும் அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக மாநகர மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இதில் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 



ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது, 







தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் மூலம் அரசு ஆண்டுக்கு 4000 கோடி ரூபாய் ஊழல் செய்து வருகிறது. பாட்டில் முதல் டம்ளர் வரை அனைத்திலும் ஊழல் செய்யும் திமுக அரசை மக்கள் அப்புறப்படுத்துவதற்கு தொடக்க போராட்டமாக இந்நாளை கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. 

திமுக ஆட்சியை அகற்றும் வரை இந்த போராட்டம் தொடரும். திருப்பூர் மாநகராட்சியில் 50 ரூபாய் மதிப்புள்ள துடைப்பத்தை 440க்கு தீர்மானம் நிறைவேற்றி மாநகராட்சி நிர்வாகம் வாங்கி இருப்பதன் மூலம் மாநகராட்சியின் நேர்மையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இதுபோல அனைத்து வகையிலும் திமுக அரசு ஊழல் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...