தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்ட அமைச்சர் காந்தி!

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் காந்தி, குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் நூல்களின் தரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். 

கோவையில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொள்கிறார். இதன் ஒரு நிகழ்வாக குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அங்குள்ள கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் துறையின் முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறையின் ஆணையர் வள்ளலார், மாநகராட்சி துணை ஆணையர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணி நூல் துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...