திட்டக்குழு தேர்தல் குறித்து கோவையில் திமுக ஆலோசனை கூட்டம்!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டம் டாடாபாத் பகுதியில் திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பான திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வரும் ஜூன்23ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.



இந்நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில், திமுக கோவை மாவட்ட கழக நிர்வாகிகள், நகர ஒன்றிய கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர், கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், நிலை குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...