வால்பாறையில் தனியார் எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!

வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.


கோவை: வால்பாறை அருகேயுள்ள வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறை அருகே வெல்லமலை எஸ்டேட் நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 100க்கும் மேற்பட்டவர் கையில் கொடி ஏந்தி எஸ்டேட் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், எஸ்டேட் தொழிலாளர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பட்டர் ஃப்ரூட் மரங்களில் உள்ள பழங்களை தொழிலாளர்கள் பறித்து உபயோகம் செய்ய விடாமல், எஸ்டேட் நிர்வாகம் பறித்து விற்பனை செய்து வருகிறது. இதை கைவிட வேண்டும்.

தேயிலை காடுகளில் தேயிலைச் செடிகளை மூடி கிடக்கும் செடி, கொடிகள் மற்றும் கலைகளை அகற்றி பவுண்டரி லைன் மற்றும் வெட்டுச்சால் வெட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு சம்பளத்தை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



தொழிலாளர்கள் குடியிருப்புகளில் குடியிருப்புடன் இணைந்த கழிவறை வசதி செய்து தர வேண்டும். மரத்தாலான தடுப்புகளுக்கு பதிலாக கான்கிரீட் சுவர் கட்டித் தர வேண்டும்.



வெள்ளைமலை டாப் டிவிஷன் சூப்பர்வைசர் தினசரி ஆள் கணக்கு பட்டியலில் வேலைக்கு வராத தொழிலாளர்களின் பெயர்களை தினசரி திருட்டுப் பெயர் போட சொல்லி உழைப்பு சுரண்டல் செய்யும் விஜயன் மற்றும் லியோவை கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காஞ்சமலை வடக்கு டிவிஷனில் பி.கே.டி கம்பெனியில் பணம் இல்லை ஒப்பந்தம் அடிப்படையில் இன்சென்டிவ் கொழுந்து பறித்து கொடுங்கள் நான்கு ரூபாய் உங்களுக்கு ஒரு ரூபாய் எங்களுக்கு என்று கம்பெனியை பெயரை சொல்லி தொழிலாளர்களிடம் பேசி உழைப்பு சுரண்டலில் ஈடுபட்டு காண்டிராக்டராக நடந்து கொண்டிருக்கும் விஜயன் மற்றும் சிவா கம்பெனியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் ஆனைமலை அம்பேத்கர் தோட்ட மக்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தை கட்சி சங்கத் தலைவர் வீரமணி மற்றும் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எஸ்டேட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...