கோவையில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் அறிமுக விழா - இலவச உணவு வழங்கும் மாற்றுத்திறனாளிக்கு இலவச வாகனம்!

கோவையில் ஒசோடெக்ஸ் என்ற எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் இலவச உணவு வழங்கும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு இலவசமாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

கோவை: கோவையில் உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனத்தின் புதிய வாகனத்தை கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார். 

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பரதன் என்பவர், ஒசோடெக்ஸ் என்ற புதிய நிறுவனம் வாயிலாக எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.



விவசாயம், குறுந்தொழில் உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய வாகனம் குறித்து நிறுவன உரிமையாளர் பரதன் கூறியதாவது, சக்தி வாய்ந்த 10 kwh பேட்டரி, ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை செல்ல முடியும் வகையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

புளுடூத், ஜி.பி.எஸ்.உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே கோவையில் இலவச உணவு வழங்கி வரும் ‘பசியாற சோறு’ அமைப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு, இருசக்கர வாகனத்திலேயே சென்று உணவு வழங்கும் வகையில், புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...