கோவை பேரூர் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநர் கைது!

பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் ஷைனி குரூடோபெல் (29). என்பவரிடம் இருந்து 18 சவரன் நகைகளை திருடிய கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை: பச்சாபாளையம் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் தங்க நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் ஷைனி குரூடோபெல் (29). இவர் கோவை பச்சாபாளையம் பகுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான கூடலூர் சென்ற ஷைனி மீண்டும் நேற்று கோவைக்கு வந்துள்ளார்.

அப்போது பேருந்து நிலையத்திலிருந்து கால் டாக்சி மூலம் பச்சாபாளையம் வந்துள்ளார். அப்போது, தனது உடைமைகளை சோதனை செய்த போது, காரின் பின்புறம் வைத்திருந்த பையில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் பேரூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில், 18 சவரன் நகையை திருடியது கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...