கோவை பேரூர் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநர் கைது!

பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் ஷைனி குரூடோபெல் (29). என்பவரிடம் இருந்து 18 சவரன் நகைகளை திருடிய கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை: பச்சாபாளையம் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் தங்க நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் ஷைனி குரூடோபெல் (29). இவர் கோவை பச்சாபாளையம் பகுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான கூடலூர் சென்ற ஷைனி மீண்டும் நேற்று கோவைக்கு வந்துள்ளார்.

அப்போது பேருந்து நிலையத்திலிருந்து கால் டாக்சி மூலம் பச்சாபாளையம் வந்துள்ளார். அப்போது, தனது உடைமைகளை சோதனை செய்த போது, காரின் பின்புறம் வைத்திருந்த பையில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் பேரூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில், 18 சவரன் நகையை திருடியது கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...