கோவை சிங்கநல்லூரில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வரும் சிலர் கோவில் வாசலில் படுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், கடை மூடினாலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்வதாக கூறி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...