கோவை சிங்கநல்லூரில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வரும் சிலர் கோவில் வாசலில் படுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், கடை மூடினாலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்வதாக கூறி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...