காஷ்மீர்‌ வேளாண்‌ பல்கலை. -‌ கோவை வேளாண் பல்கலை. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில் கடந்த மே 15ஆம் தேதி சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஷைர்-இ-காஷ்மீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம் மற்றும் ஜம்முவின்‌ ஷைர்‌-இ-காஷமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகம்‌ ‌இடையே ஸ்ரீநகரில்‌ 15.05.2023 அன்று சாண்ட்விச்‌, ட்வின்னிங் திட்டத்தின்‌ கீழ்‌ முதுகலை மாணவர்களின்‌ ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ (MoU) கையெழுத்தானது.

முதன்மையாக இருவேறு நிறுவனங்களுக்கிடையய கல்வி மற்றும்‌ ஆராயச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது, சாண்ட்விச்‌, ட்வின்னிங்‌ திட்டத்தின்‌ மூலம்‌ முதுகலை மாணவர்கள்‌ பரிமாற்றத்தை‌ தொடங்குவது போன்ற அம்சங்களை இரு பல்கலைக்கழகங்களும்‌ கூட்டாக ஒப்புக்‌ கொண்டன.

இதில்‌ பங்குபெறும்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ பட்டப்படிப்பு பின்‌ ஒரு பகுதியை ஒரு பல்கலை கழகத்திலும்‌ மற்றொரு பகுதியை மற்றும்‌ ஒரு பல்கலை கழகத்திலும்‌ முடிக்க வேண்டும்‌.

இந்த ஒப்பந்தத்தில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா. தமிழ்வேந்தன்‌,

ஜம்மு ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ சுஷில்குமார்‌ குப்தா மற்றும்‌ காஷ்மீர்‌ ஷைர்‌-இ-காஷ்மீ ர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, டி.எச்‌. மசூதி ஆகியோர்‌ மாணவர்களின்‌ நலனுக்கான ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி, ஐம்மு மற்றும்‌ காஷ்மீரின்‌ ஷைர்‌-இ-காஷீமீர்‌ வேளாண்‌ அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ நசீர் அகமது கனய் ஆகியோர்‌ முன்னிலையில்‌ இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர்‌ முனைவர்‌ ந.செந்தில்‌, வேளாண்மை முதன்மையர்‌ முனைவர்‌ ந.வெங்கடேச பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர்‌ (ஜஐடிபி) முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ மற்றும்‌ இருதரப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌ இக்கையொப்பமிடும்‌ நிகழ்வில்‌ கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்‌.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...