பூரண மதுவிலக்கு கோரி கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க நாம் தமிழர் கட்சி முடிவு!

கோவை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூன் 12ஆம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியின் மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளதாக அறிவிப்பு.‌



கோவை: பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 







பூரண மதுவிலக்கு என்பதை நாம்‌ தமிழர்‌ கட்சி கொள்கையாக‌ கொண்டுள்ளது. அதன்‌ அடிப்படையில்‌ வரும்‌ ஜூன் 12ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ பூரண மதுவிலக்கு கோரி, பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற்று மகளிர்‌ பாசறையின்‌ சார்பாக மனு கொடுக்க உள்ளோம்‌.



எனவே தானியங்கி பிரச்சார வாகனம்‌ மூலம்‌ பொதுமக்களிடம்‌ கையெழுத்து பெற அனுமதி கொடுக்குமாறு கேட்டுக்‌ கொள்கிறோம்‌. இதனால்‌ பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும்‌ வராது என்பதை உறுதீபட தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.

மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் இதுபோல வழிமுறையை பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...