கோவையில் நடக்கும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு!

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சாலைகளின் தரம் குறித்து சோதனை செய்தார். பின்னர், ஜூன் 26 ஆம் தேதி செம்மொழி பூங்கா ஒப்பந்தம் நிறைவுக்குப்பின் பணிகள் தொடங்கப்படும் என்றார்.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கோவை மாநகராட்சியின் வார்டு எண் 22-ல் உள்ள குமுதம் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார். 



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கூறியதாவது, கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

கோவையில் பாதாள சாக்கடைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய முடிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு வருட நிதியை வைத்து 563 சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

86 கிலோமீட்டர் சாலைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில் வேலை நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலைகள் செப்டம்பர் மாதத்திற்குள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடாகம் சாலை போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். 

அதேபோல சூலூர் பகுதிகளில் தரம் அற்றதாக போடப்பட்ட சாலைகள் குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம்மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது. அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...