கோவையில் நடக்கும் தார் சாலை பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு!

கோவை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, சாலைகளின் தரம் குறித்து சோதனை செய்தார். பின்னர், ஜூன் 26 ஆம் தேதி செம்மொழி பூங்கா ஒப்பந்தம் நிறைவுக்குப்பின் பணிகள் தொடங்கப்படும் என்றார்.



கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரத்தை பரிசோதனை செய்தார்.

நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, கோவை மாநகராட்சியின் வார்டு எண் 22-ல் உள்ள குமுதம் நகர் பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்தார். 



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா கூறியதாவது, கோவை மாநகராட்சியில் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. 

கோவையில் பாதாள சாக்கடைகள் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிய முடிய சாலைகள் போடப்பட்டு வருகிறது. இரண்டு வருட நிதியை வைத்து 563 சாலைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளோம்.

86 கிலோமீட்டர் சாலைகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. மற்றவைகள் பல்வேறு நிலைகளில் வேலை நடைபெற்று வருகிறது. பழுதடைந்த சாலைகள் செப்டம்பர் மாதத்திற்குள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தடாகம் சாலை போடப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சாலைகள் போடப்பட்டு வருகிறது. போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். 

அதேபோல சூலூர் பகுதிகளில் தரம் அற்றதாக போடப்பட்ட சாலைகள் குறித்த தகவல்கள் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும். ஜூன் 26 ஆம் தேதி செம்மொழிப் பூங்கா ஒப்பந்தம் போடப்படுகிறது. அதற்குப்பின் பணிகள் தொடங்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...