கோவை மாவட்ட வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் கோவை மாவட்ட மக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை 2023-24ஆம் ஆண்டில் நடவு செய்வதற்காக மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட மக்களுக்கு வனத்துறை சார்பில் விலையில்லா மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் கோவை மாவட்ட வனத்துறையின் மூலம், கோவை வனவியல் விரிவாக்க கோட்டத்தின் சார்பில் 2023-24ஆம் ஆண்டில் நடவு செய்வதற்காக மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு மரநாற்றுகள், தேக்கு, சவுக்கு, புளியன், புங்கன், நெல்லி உள்பட பல்வேறு இன மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, கோவை வனவியல் விரிவாக்க கோட்டத்தின், விளம்பர சரகம் ॥-ன் மூலம் கோவை, மத்தம்பாளையம் பகுதியில் உள்ள நாற்றங்கால் மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
ஆர்வமுள்ளவர்கள் நேரிலோ அல்லது கைப்பேசிவாயிலாகவோ தகவல்களை கேட்டு, விலையில்லா மரக்கன்றுகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் தொடர்புக்கு
வனவியல் விரிவாக்க அலுவலர்,
வனவியல் விரிவாக்க கோட்டம்,
கோவை - 641043
வனச்சரக அலுவலர் / விளம்பர அலுவலர்
விளம்பர சரகம் - II
கோவை
தொலை பேசி எண்கள்: 8667266884, 8220151817