வால்பாறையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் வாழைத்தோட்ட பகுதியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையமும் திறக்கப்பட்டது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பொது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...