வால்பாறையில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறையில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற நல்வாழ்வு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற நகர்ப்புற நல்வாழ்வு மைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.



மேலும், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையங்களையும் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்பொழுது கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி மூலம் வாழைத்தோட்ட பகுதியில் 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மையமும் திறக்கப்பட்டது.

இந்த நகர்ப்புற நலவாழ்வு மையம் பொது மக்களின் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை மூலம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.



இந்த நிகழ்வில், வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சுதாகர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...