வால்பாறையில் தீவிபத்திற்குள்ளான உணவகம் - நிதியுதவி வழங்கிய எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த உணவகம் தீவிபத்தில் சிக்கிய நிலையில், கடையை மீண்டும் அமைக்க முடியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கு எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி நிதியுதவியை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்த உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியபாமா என்பவர் சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவு இந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே, கடையை சரி செய்ய முடியாமலும், புதிய பொருட்கள் வாங்க முடியாமலும் கடையின் உரிமையாளர் சத்தியபாமா இருந்து வந்தார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை பகுதிக்கு வந்து தீப்பிடித்து சேதம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கடையை மீண்டும் கட்டுவதற்கு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர மன்ற செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...