சூலூரில் புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் திறப்பு - மேற்கு மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சூலூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை சூலூரில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்குட்பட்ட சூலூர், கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் மகளிர் சார்ந்த புகார்களை அளிக்க பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் சூலூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் சூலூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், ADGP சங்கர், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக DIG விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய மகளிர் காவல் நிலையத்தை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மகளிர் காவலர்கள் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.



கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையத்தில் கைதிகள் அறை கணினி அறை ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் இந்த புதிய மகளிர் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் ஏழு மகளிர் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பேசியதாவது, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி, கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட சூலூர் காவல் நிலைய வளாகத்தில் இந்த புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்புதல் தரப்பட்டு புதிய கட்டிடம் திறக்கப்படும். மேலும் அனைத்து குற்ற வழக்குகளும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளும் சைபர் குற்றங்களும் இங்கு விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...