கோவை வேளாண் பல்கலையில் உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாட்டம்!‌

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நெகிழி பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தும் மனித சங்கிலி, கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கோவை: வேளாண் பல்கலைக்கழகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மனித சங்கிலி, கருத்தரங்கம் மற்றும் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறை சார்பில் கடந்த ஜூன்‌ 5 ஆம்‌ தேதி உலக சுற்றுச்சூழல்‌ தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டில்‌ நெகிழி மாசுபாடு குறைப்பு மற்றும்‌ விழிப்புணர்வு பற்றிய பல்‌வேறு அங்கங்களாக, மலபார்‌ கோல்டு & டைமண்டு மற்றும்‌ ஐ.டி.சி ஆகிய குழுமங்களுடன்‌ இணைந்து பல்வேறு நிகழ்வுகள்‌ மற்றும்‌ போட்டிகள்‌ நடத்தப்பட்டன.



அவற்றுள்‌ ஒரு நிகழ்வாக வேளாண்மைப்‌ பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின்‌ மனித சங்கிலி, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ தமிழ்வேந்தன்‌, சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ மகேஸ்வரி மற்றும்‌ பயிர்‌ மேலாண்மை இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌ கலாராணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்வில்‌ வேளாண்‌ பலகலைக்கழகத்தின்‌ நிர்வாக இயக்குநர்கள்‌, முதன்மையர்கள்‌ மற்றும்‌ சுமார்‌ 300க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ கலந்து கொண்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்பாக நெகிழி மாசுபாடு மறறும்‌ பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்‌.

அதைத்‌ தொடர்ந்து பொதுமக்களுக்கு பழ மரக்கன்றுகளை வழங்கும்‌ நிகழ்வும்‌ நடைபெற்றது. இந்த நிகழ்வையடுத்து தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்திலுள்ள பொன்விழா அரங்கில்‌ நெகிழி மாசுபாடு குறித்த கலை நிகழ்ச்சிகள்‌, கருத்தரங்கம்‌ மற்றும்‌ பட்டிமன்றம்‌ ஆகியவை நடைபெற்றன.

காற்று, மண்‌, நீர்‌ மற்றும்‌ உயிரினங்கள்‌ ஆகியவற்றிற்கு நெகிழியினால்‌ ஏற்படும்‌ தீங்குகளை மாணவர்கள்‌ தங்களின்‌ சிந்தனை துகள்களை கருத்தரங்கத்தின்‌ வாயிலாக விளக்கினர்‌.

அதன்‌ பிறகு சுற்றுச்சூழல்‌ அறிவியல்‌ துறை, முதுகலை மாணவர்களின்‌ நெகிழி பயன்பாடு மனித குலத்தை விண்ணை தொட வைக்குமா? அல்லது மண்ணில்‌ புதைய வைக்குமா? என்ற தலைப்பில்‌ நெகிழி பயனபாடு, மாசுபாடு, விழிப்புணர்வு மற்றும்‌ நெகிழியின்‌ பல்வவறு தன்மைகள்‌, ஊடுருவும்‌ முறை ஆகியவற்றை பற்றி காரசாரமான பட்டிமன்றம்‌ நடைபெற்றது.

இந்த பட்டிமன்றத்தின்‌ நிறைவாக மாணவர்‌ நல மையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ மரகதம்‌, நெகிழி மாசுபாடு பற்றியும்‌ அவற்றை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்‌ மற்றும்‌ இன்றியமையாமை குறித்தும்‌ விளக்கினார்‌.

அவற்றைத்‌ தொடர்ந்து உலக சுற்றுச்சூழல்‌ தின நிகழ்வாக கருத்தரங்கில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌, முனைவர்‌ இரா.தமிழ்வேந்தன்‌ அவர்கள, முனைவர்‌ எஸ்‌.டி. சிவக்குமார்‌ முனைவர்‌ மு.மகேஸ்வரி, மற்றும்‌ முனைவர்‌ தேவகி ஆகியோர்‌ முன்னிலையில்‌ நெகிழி மாசுபாடு குறித்த சிறந்த புகைப்படபோட்டி, கவிதைப்‌ போட்டி, குறும்பட தொகுப்பு, நெகிழி கைவினை பொருட்கள்‌ மற்றும்‌ பல்வேறு போட்டிகள்‌ நடைபெற்றது. 

இப்போட்டிகளில்‌ வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலையின்‌ பதிவாளர்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ பரிசுகளை மாணவர்களுக்கு வழங்கினார்‌. இந்த நிகழ்வுகளின்‌ தொடர்ச்சியாக இணையவழி கருத்துரை “நெகிழிகள்‌ உலகின்‌ அடுத்த நெருக்கடி” என்ற தலைப்பில்‌ முதன்மையர்‌ முனைவர்‌ முகமது ரியாஸ் உட் (UNDP Accelerator lab, Figi) வெகுசிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...