கோவையில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 2 பெண்கள் கைது

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ரயில்கள் மூலம் அரிசி கடத்தும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று (05.06.2023) காலை 08.00 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையின் போது, நடைமேடை 3 ல் அடுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றப்பட்டது.



மேலும், அதனை ரயிலில் கடத்த தயாராக இருந்த கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், போத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா செல்லும் ரயில்கள் மூலமாக கேரள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...