பல்லடம் அருகே குளிர்பான குடோனில் பணியாற்றிய 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே MVS நகரில் தனியார் குளிர்பான சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதன் அடிப்படையில் இன்று குளிர்பான சேமிப்பு கிடங்கில் திருப்பூர் தொழிலாளர் துறை மூன்றாம் சரக உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



இதில் குளிர்பான சேமிப்பு கிடங்கில் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 14 முதல் 18 வயதுடைய 12 குழந்தை தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் ஆறு குழந்தை தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.



இதை அடுத்து 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தியதற்காக குளிர்பான சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது குழந்தைகள் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் முறைபடுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் தப்பி ஓடிய ஆறு குழந்தை தொழிலாளர்களையும் தேடி பிடித்து மீட்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்பான சேமிப்பு கிடங்கில் 12 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...