பல்லடம் அருகே குளிர்பான குடோனில் பணியாற்றிய 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே MVS நகரில் தனியார் குளிர்பான சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதன் அடிப்படையில் இன்று குளிர்பான சேமிப்பு கிடங்கில் திருப்பூர் தொழிலாளர் துறை மூன்றாம் சரக உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



இதில் குளிர்பான சேமிப்பு கிடங்கில் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 14 முதல் 18 வயதுடைய 12 குழந்தை தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் ஆறு குழந்தை தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.



இதை அடுத்து 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தியதற்காக குளிர்பான சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது குழந்தைகள் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் முறைபடுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் தப்பி ஓடிய ஆறு குழந்தை தொழிலாளர்களையும் தேடி பிடித்து மீட்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்பான சேமிப்பு கிடங்கில் 12 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...