வால்பாறையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு!

வால்பாறையில் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி துவங்கி வைத்தார்.



கோவை: வால்பாறையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக வால்பாறை கலை கல்லூரியில் நகரங்களின் தூய்மைக்கான பணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தவள்ளி துவங்கி வைத்தார். 

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



பின்பு காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்து தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும், நகரங்களை தூய்மையாக வைக்க வேண்டும், என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...