வால்பாறையில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு!

வால்பாறையில் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி துவங்கி வைத்தார்.



கோவை: வால்பாறையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்தல் குறித்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவல்லி, நகராட்சி ஆணையாளர் வெங்கடாசலம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



முன்னதாக வால்பாறை கலை கல்லூரியில் நகரங்களின் தூய்மைக்கான பணியை நகராட்சி தலைவர் அழகுசுந்தவள்ளி துவங்கி வைத்தார். 

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.



பின்பு காந்தி சிலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்தெடுத்து தூய்மை பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும், நகரங்களை தூய்மையாக வைக்க வேண்டும், என்று உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...