ஈச்சனாரி அருகே இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சோகம்!

தேனி மாவட்டத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்ற நர்சிங் கல்லூரி மாணவர், தனது நண்பருடன் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி அருகே இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கோவில்பட்டி, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆண்டவர் என்பவரது மகன் ஹரிகிருஷ்ணன் (21). இவர் ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவரது அறையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (18). என்பவரும் தங்கி அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அறையில் இருந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் ஆகாஷ் இருவரும் அவரது நண்பர்களான ஆதித்யா என்பவரது இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, டீ குடிக்க மலுமிச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளனர். 



பின்னர் மீண்டும் அறைக்கு திரும்பி வந்த போது மலுமிச்சம்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை நடுவே இருந்த இரும்பு தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஆகாஷை மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...