வால்பாறை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - தந்தை, மகன் படுகாயம்!

வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தின் மீது எஸ்டேட் டிராக்டர் மோதிய விபத்தில், முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (42) மற்றும் அவரது மகன் சூரியா (12) ஆகிய இருவரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அடுத்த முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் அதே எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பாலமுருகன் அவரது மகன் சூரியா (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வால்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம் உருளிக்கள் எஸ்டேட் அடுத்த பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த உருளிக்கள் எஸ்டேட் டிராக்டர் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலமுருகன் மற்றும் அவரது மகன் சூரியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.



இதில், மகன் சூரியவுக்கு தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தந்தை பாலமுருகனுக்கு கால் முறிவும், கை கால்களில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சேக்கல்முடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...