வால்பாறை அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - தந்தை, மகன் படுகாயம்!

வால்பாறை அருகேயுள்ள உருளிக்கல் எஸ்டேட் அருகே இருசக்கர வாகனத்தின் மீது எஸ்டேட் டிராக்டர் மோதிய விபத்தில், முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (42) மற்றும் அவரது மகன் சூரியா (12) ஆகிய இருவரும் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: வால்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அடுத்த முருகாலி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் அதே எஸ்டேட் பகுதியில் தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பாலமுருகன் அவரது மகன் சூரியா (12) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வால்பாறை நோக்கி சென்றுள்ளனர்.

இருசக்கர வாகனம் உருளிக்கள் எஸ்டேட் அடுத்த பெரியார் நகர் அருகே வந்தபோது, எதிரே வந்த உருளிக்கள் எஸ்டேட் டிராக்டர் இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலமுருகன் மற்றும் அவரது மகன் சூரியா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு, எஸ்டேட் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து பின் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.



இதில், மகன் சூரியவுக்கு தலையில் பலத்த காயமும், கால் முறிவும் ஏற்பட்டுள்ளது. மேலும் தந்தை பாலமுருகனுக்கு கால் முறிவும், கை கால்களில் காயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சேக்கல்முடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...