கோவை குறிச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை - ஆட்டோ ஓட்டுநர் கைது!

குறிச்சி அருகே லாட்டரி விற்பனை தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர், கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சி அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போத்தனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை குறிச்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போன் மூலமாக மூணு நம்பர் லாட்டரி விற்பனை நடப்பதாக போத்தனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராக்கியப்பன் தலைமையிலான போலீசார் குறிச்சி காந்திஜி சாலை பகுதிக்கு ரோந்து சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பிடிபட்ட நபர் போத்தனூர் குருசாமி பிள்ளை வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (47) என்பதும், ஆட்டோ ஓட்டி வரும் பிரகாஷ் கேரளாவில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இவர், செல்போன் மூலம் மூணு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 10 லாட்டரி சீட்டுகள், செல்போன், நோட்டுப் புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தபோலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...