குன்னூர் அருகே 15 சவரன் நகை, ரூ.40,000 பணம் கொள்ளை - கைவரிசை காட்டிய பெண் கைது!

குன்னூர் அடுத்த அட்டடி பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவர் திருமண நிகழ்ச்சிக்காக வெளியில் சென்ற போது, அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் நகை, ரூ.40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த ஆரோக்கிய மேரி என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.



நீலகிரி: குன்னூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 15 சவரன் நகை, ரூ.40,000 பணத்தை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர், நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, திருடியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...