கோவையில் அனுமதியற்ற 185 விளம்பர பலகைகள் அகற்றம்!

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 185 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக, சமீபத்தில் கருமத்தம்பட்டியில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக நில உரிமையாளர், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தகவல்.



கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 185 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உள்ளாட்சி அமைப்பு, காவல்துறையினர் இணைந்து அகற்ற தனிக்குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தெக்கலூர் அடுத்த நீலாம்பூர் சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற காவல்துறையினர் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே கருமத்தம்பட்டி அருகே இரும்பு கம்பம் சரிந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீதும், நில உரிமையாளர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கும் பட்சத்தில் நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தினர் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...