திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டில் விற்பனை செய்த பேக்கரிக்கு நோட்டீஸ்!

மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகரில் செயல்பட்டு வந்த பேக்கரி ஒன்றில் சுகாதாரமற்ற நிலையில், குடிநீர் பாட்டில் விற்பனை குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பேக்கரியில் நடத்திய சோதனையில், அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் இருந்தது குறித்து பேக்கரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் பாட்டிலை விற்பனை செய்த பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலை அடுத்த எஸ்.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நீலாம்பிகை அய்யங்கார் பேக்கரியில் வாடிக்கையாளர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். அந்த தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதுகுறித்து அந்த நபர் கடை ஊழியர்களிடம் கேட்டபோது உரிய பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார்.



இந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் ரவி தலைமையிலான அதிகாரிகள் கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தனர்.



அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 



தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த கடை உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும், ஆய்வு செய்யும் பொழுது அழுகிய உருளைக்கிழங்கு தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர் மேலும் அங்கு பறிமுதல் செய்யப்பட்ட குடிநீர் பாட்டிலை ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...