அவிநாசி அரசு மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நாதம்பாளையம் ரேஷன் கடை, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



திருப்பூர் மாவட்ட ஆட்சியராக சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணிபுரிந்து வந்த கிறிஸ்துராஜ் கடந்த வாரம் பதவி ஏற்றுக்கொண்டார்.



இந்நிலையில், இன்று அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 



இதேபோல், நாதம்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை, முதலிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டார். 



அப்போது பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் வகுப்பறைகள் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். 



மேலும் பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...