பிழைப்பூதியம் வழங்கக்கோரி கோவையில் இளநிலை உதவியாளர் உண்ணாவிரதம்!

சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணகுமார், இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் பெற்று வந்த நிலையில், கடந்த 5 மாதமாக பிழைப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: பிழைப்பூதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பள்ளியில் சமச்சீர் அல்லாத புத்தகம் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் பிழைப்பு ஊதியம் பெற்று வந்தார். ஆனால் தற்பொழுது 2023 ஜனவரி முதல் இன்று வரை பிழைப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், கடந்த ஐந்து மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...