பிழைப்பூதியம் வழங்கக்கோரி கோவையில் இளநிலை உதவியாளர் உண்ணாவிரதம்!

சின்னதடாகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் இளநிலை உதவியாளர் சரவணகுமார், இடைநீக்கம் செய்யப்பட்டு பிழைப்பூதியம் பெற்று வந்த நிலையில், கடந்த 5 மாதமாக பிழைப்பூதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



கோவை: பிழைப்பூதியம் வழங்க கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சின்ன தடாகம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு பள்ளியில் சமச்சீர் அல்லாத புத்தகம் காணாமல் போனதாக வழக்கு பதியப்பட்டு தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சரவணக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2022 ஆம் ஆண்டு 50 சதவீதம் பிழைப்பு ஊதியம் பெற்று வந்தார். ஆனால் தற்பொழுது 2023 ஜனவரி முதல் இன்று வரை பிழைப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், கடந்த ஐந்து மாதம் பிழைப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...